8 பிப்., 2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் திருநங்கைகள்


நகர்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் திருநங்கைகள்

Transgender Persons given tickets in Tamil Nadu Urban local body elections 2022

அரசியலில் சாதி, மத, பாலின வேறுபாடுகளைப் பற்றி பேசியும், விவாதித்தும் வரும் நமது சமூகம் காலம் காலமாக திருநங்கை மற்றும் திருநம்பிகளை மூன்றாம் பாலினத்தவர்கள் என்று ஒதுக்கியே வருகிறது. ஏன் இன்றளவும் அத்தகைய நிலையே தொடர்கிறது. இச்சூழலில் தீவிர அரசியலில் அதாவது தேர்தல் களத்தில் போட்டியிட ஒரு சில அரசியல் கட்சிகள் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. வரும் 19 பிப்ரவரி-ல் நடக்க இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது இவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த கட்சிகள்
திருநங்கைககளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளித்த நிலையில் அதனை தொடர்ந்து அக்கட்சி தற்போது நடக்க இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. வேலூர் நகராட்சியில் வார்டு எண்.40-ல் திருநங்கை ரஞ்சிதா (52) மற்றும் வார்டு எண்.41-ல் திருநங்கை சபீனா (33) ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

அதேபோன்று திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் இத்தேர்தலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளன. வேலூர் மாநகராட்சி வார்டு எண் 37-ல் திருநங்கை கங்கா நாயக் (49) என்பவருக்கு திமுக வாய்ப்பளித்துள்ளது. அதேபோன்று அதிமுக சார்பாக சென்னை மாநகராட்சி வார்டு எண்.112-ல் (தேனாம்பேட்டை மண்டலத்தில்) திருநங்கை ஜெயதேவி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. பாஜக சார்பில் சென்னை மாநகராட்சி வார்டு எண்.76-ல் (திரு.வி.க நகர்) திருநங்கை ராஜம்மா அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளது என்பது ஒரு பக்கம் நல்ல செய்தியாக இருந்தாலும், திருநம்பிகளுக்கு வாய்ப்பளிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

திருநங்கை & திருநம்பி

ஆண் பெண் அல்லாத ஒருவர் தன்னை பெண்ணாக அடையாளபடுத்தி கொண்டு வாழ்ந்தால் அவர் திருநங்கை ஆவார். அதுவே தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் அவர் திருநம்பி ஆவார்.

திருநங்கை, திருநம்பிகளுக்கு ஏன் தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்?
 
ஆண் பெண் தவிர மூன்றாவதாக ஓர் பாலினமும் உள்ளது. அந்த மூன்றாவது பாலினத்தை சேர்ந்தவர்களில் அவரவர் விருப்பம் போல் திருநங்கை மற்றும்
திருநம்பி என தனது உணர்வுகளுக்கேற்ப தன்னை அடையாளபடுத்திக் கொண்டு வாழ்ந்து வர அவர்களுக்கு உரிமை உண்டு என்ற அடிப்படை விவரம் நமது நாட்டு மக்களுக்கு புரிய வைப்பதற்கான காரணத்திற்காவது திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.

காலம் காலமாக நமது சமூகம் திருநங்கை மற்றும் திருநம்பிகளை சக மனிதர்களாக கருதாமல் அவர்களை கேலி செய்தும், இழிவுபடுத்தியும் வந்த நிலையில் தற்போது நமது சமூகம் அவர்களை அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. அப்படியிருந்தும் இன்றளவும் பெரும்பாலன மக்களிடம் பாலினம் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருநங்கை, திருநம்பிகளை இழிவாக பார்க்கும் பழக்கம் முழுவதும் போகவில்லை. 

எனவே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசியலில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இனி வரும் தேர்தல்களிலாவது அவர்களுக்கு போதிய வாய்ப்பளித்து ஆண் பெண் பாலினம் போல இன்னொரு பாலினம் உள்ளது. அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களாலும் சாதிக்க முடியும் என்று நம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திருநங்கை மற்றும் திருநம்பிகளின் கண்ணியத்தை காப்பாற்றுவது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும்.

அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும் . அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூ...