அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும். அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்திகொடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு அரசியலுக்கும் அரசியல் செய்பவர்களுக்கும் உள்ளது. இந்த உண்மையை தற்போதிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ந்தால்தான் நாம் இந்த பூமியில் நிம்மதியாக வாழமுடியும். இல்லையெனில், பூமி தாய் நம்மை கைவிட்டுவிடுவாள் என்பதை உணர்ந்து நமது நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசியல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் இந்த பூமி
குறித்த புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். இயற்கை அளித்த கொடையான காடு, மலை, குன்றுகள், ஆறுகள், குளம், குட்டைகள் மற்றும் அவைகளை
சார்ந்து வாழும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்து
அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை அனைத்தும் நாம் உயிர்வாழ தேவையான காற்று, நீர், உணவு, உடை மற்றும் இருப்பிடம்
போன்ற அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய
உதவுகின்றது. எனவேதான் மனிதர்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால் நமது அரசியல் தலைவர்கள்
இயற்கையின் மகத்துவத்தையும் உணர்ந்து, அதனை பேணி பாதுகாப்பதற்காக
அரசியல் செய்வது இன்றைய சூழலில் அவசியமாக உள்ளது.
இயற்கை வளங்களை சுரண்டும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு
அரசியல் என்றால் தேர்தலில் வென்று பதவி
பெற்று இயற்கை அளித்த கொடையான காடு, மலைகளை டெண்டர் விட்டு கம்மிசன் சம்பாதிக்கலாம்
என்று என்னும் அரசியல்வாதிகள் அத்தகைய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.
ஏனென்றால் அப்படி இயற்கை வளங்களை சுரண்டி சம்பாதிக்கும் பணம் இனி அவர்களுக்கு
பயன்தரபோவதில்லை. ஏனென்றால் காடுகளை அழிப்பதனாலும், மலைகளை நொறுக்குவதனாலும் நாம் உயிர்வாழ
தேவையான காற்று, நீர் ஆகியவை மாசடையும். நீர் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உறுவாகி கரோனா போன்ற கொடிய
நோய்களுக்கும் வித்திடும். எனவே பல கொடி ரூபாய்
வைத்திருந்தாலும் நமது நாட்டில் சுற்றுச் சூழல் அழிக்கப்படடாள் அம்பானியால் கூட
நிம்மதியாக வாழ முடியாது என்ற உண்மையை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் உணர வேண்டும்.
சுற்றுச்சூழல் விழுப்புணர்வு அவசியம்
மனித குளம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால்
அரசும் , அரசியல்
கட்சிகளும் சுற்றுச்சூழல் குறித்த
விழிப்புணர்வு அடைய வேண்டும். காடு, மலைகள், ஏரிகளை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்ந்து செயல்பட
வேண்டும். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கும் விழிப்புணர்வு அடைய செய்ய வைக்க
வேண்டும்.
இயற்கையை அழிக்காமல் முன்னேற்றம் தேவை
முன்னேற்றம் என்ற பெயரில் சாலைகள் அமைக்க மலைகளை நொறுக்குவதும், காடுகள்
மற்றும் விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைக்கும் செயல்களை தவிர்த்து
அதற்கு பதிலாக மாற்று இடங்களை பரிசிலித்து அதற்கான உத்திகளை வகுத்து இயற்கை அளித்த
வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இயற்கையை அழிக்காமல் நாம் முன்னேற மாற்று
வழிகளைத் தேடி அதற்குறிய அரசியலை நமது நாட்டில் உள்ள அரசியல் காட்சிகள்
முன்னெடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பேசாத
அரசியல் கட்சிக்கு அரசியல் செய்யும்
தகுதியே கிடையாது. ஏனென்றால் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
கரோனா, குரங்கு
அம்மை போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கியுள்ள நமக்கு நாம் இருக்கும்
சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் நாம் உயிர் வாழ தேவையான
தூய்மையான காற்றும், தூய்மையான குடிநீரும் அரிதாகிவிடும். எனவே
அத்தகைய முக்கியமான விடயத்தை தவிர்க்கும் அரசியல் கட்சிகளை மக்கள் முற்றிலும்
தவிர்ப்பார்கள். ஆகவே சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு கலம் காணும் அரசியல் கட்சிகளுக்கே
மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.