11 பிப்., 2022

ஹிஜாப் சர்ச்சைக்கு நீதிமன்றம் தீர்வுகாணட்டும்

அரசியல்வாதிகளின் சுயநலத்தால் ஹிஜாப் Hijab சர்ச்சையாகியுள்ளது

மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதை பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் நமது சமூகத்தில் நஞ்சை விதைத்து மக்களிடையே மத ரீதியான பாகுபாட்டை உருவாக்கும் போக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது.

யார் பிரச்சனை

ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த பள்ளிக்கும் அதனால் பாதிக்கப்பட்ட மாணவி(களு)க்கும் உள்ள பிரச்சனையை பெரிதாக்கும் நோக்கத்தோடு அம்மாணவி பள்ளியில் நுழையும்போது தடுக்க முயற்சித்தது ஒரு கும்பல். பள்ளிக்கும் மாணவிக்கும் இருந்த பிரச்சனையில் ஒரு குறிப்பிட்ட கும்பலும் சேர்ந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு நமது தேசத்தின் ஒற்றுமையையே சீர்குலைக்கும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைப் பெரும் அற்ப எண்ணம் கோண்டு பல்வேறு கட்சிகளும், கட்சி தலைவர்களும் இந்த பிரச்சனையை அனுகி வருவது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு இழுக்காகும்.

ஹிஜாப் அணிய தடை விதித்தது யார்?

கார்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடை விதித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்  ஒரு பெண். ஆக பிரச்சனை அந்த மாணவிக்கும், அவர் பயிலும் பள்ளிக்கும் ஆகும். அப்படியிருக்கும்போது அப்பள்ளிக்கு அத்தகைய விதியை வகுக்கும் உரிமை உள்ளதா? இல்லையா? அத்தகைய விதி மாணவியின் அடிப்படை உரிமையை மீறுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. எனவே பள்ளியின் விதியால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.  

பொறுப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

அப்படியிருக்கும்போது அப்பெண்ணுக்கு எதிராக கோசமிட்ட கும்பல் இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் ஈடுபட்டுள்ளது. தேவையில்லாமல் ஈடுபட்ட கும்பலின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அச்சம்பவத்தை ஊதி பெரிதாக்கி சமூக அமைதி சீர்குலையும் அளவிற்கு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், பொறுப்புணர்வு இல்லாத ஊடகங்களும் அற்ப அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது சரியல்ல.

தேசவிரோத சக்திகள்

அரசியல்வாதிகளின் இத்தகைய செயலால் தற்போது அண்டை நாட்டுக்காரனும் இந்தியாவுக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. குறிப்பாக பாக்கிஸ்தானே நமக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு நிலை சென்றுள்ளது. போதாத குறைக்கு அத்தகைய நாடுகள் இச்சம்பவம் குறித்து அவதூறு செய்திகளையும் பரப்பி நம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதலங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே அரசியல் ஆதாயம் தேடுபவர்களிடமும் , நமது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செய்திகளை உண்மை என்று நம்ப வேண்டாம்.

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியா உலகத்திலே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு பல்வேறு மதம், இனம், மொழி மற்றும் கலச்சாரத்தை சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு உள்ளனர்.  இந்தியாவை ஒரே ஒரு சம்பவத்தை வைத்து எடை போட்டுவிட முடியாது. அதே போன்று ஒரு சில கும்பல் மற்றும் அற்ப அரசியல் கட்சிகளை வைத்தும் எடைபோட்டுவிட முடியாது. இன்றளவும் இங்கு பல கட்சிகள் மாற்று அரசியல் பயணத்தில் நேர்மையான அரசியலும் செய்யத் தொடங்கியுள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.  அனைத்திற்கும் மேலாக இந்த ஒரு சம்பவத்தால் எங்கள் மக்களின் சமூக ஒருமைப்பாட்டை அவ்வளவு எளிதில் சீர்குலைத்தும் விடமுடியாது.

ள்ளிக்கு ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவெடுத்து அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் உறுதிசெய்யப்படட்டும். எனவே ஹிஜாப் பிரச்சனையை மேலும் சர்ச்சையாக்கி சமூக அமைதியை சீர்குலைக்காமல் அமைதி காப்பது அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடமையாகும். கூடவே நாமும் சமூக வலைதலங்களில் அடுத்தவர்கள் மனதை புண்படும் வகையில் ஹிஜாப் Hijab குறித்த அவதூறு கருத்தக்களை பகிர்வதை தவிர்ப்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை அதுவே நமது பெருமை!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும் . அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூ...